Saturday, May 4, 2024
Home » செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு

செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு

by Ranjith

 

அண்ணாநகர், ஏப்.21: செல்போனில் பேசியபடி சாலையை கடந்த இளம்பெண் மீது, பைக் மோதியதில் பரிதாபமாக இறந்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பலாரி அங்லால்குச்சி பாணி (24). இவர், அமைந்தகரையில் வாடகை வீட்டில் தங்கி, அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தார். கடந்த 17ம்தேதி இரவு வேலை முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்ட இந்த இளம்பெண், அமைந்தகரை பகுதியில் செல்போனில் பேசியபடி சாலையை கடந்துள்ளார்.

அப்போது, அவ்வழியே வந்த பைக் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலாரி அங்லால்குச்சி பாணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான பைக் நம்பரை வைத்து, விபத்து ஏற்படுத்தி தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

six + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi