Monday, May 6, 2024
Home » செய்யூரில் இருந்து மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர் வழியாக மீண்டும் சென்னை வரை பேருந்தை இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்யூரில் இருந்து மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர் வழியாக மீண்டும் சென்னை வரை பேருந்தை இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

by Suresh

மதுராந்தகம், மே. 8: செய்யூரில் இருந்து அம்மனூர், அரியனூர், ஜமீன் எண்டத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கோயம்பேடு வரை இயக்கப்பட்டு வந்த பேருந்து தற்போது செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டு வருகிறது. இதனை மீண்டும் சென்னை கோயம்பேடு வரை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பணிமனையில் இருந்து அரசு பேருந்து தடம் எண் 83 என்ற பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர், அரியனூர், அம்மனூர் வழியாக செய்யூர் வரை இயக்கப்பட்டது. தற்போது, செய்யூரில் இருந்து – செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. இதனால், செங்கல்பட்டில் இருந்து பொதுமக்கள் வேறு பேருந்துகளை பிடித்து சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். மேலும், பயண நேரம் வீணாவதுடன், பல்வேறு வீண் அலைச்சலும், பொதுமக்கள் அவதியும் அடைந்து வருகின்றனர்.மேலும், தாம்பரம், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இந்த பேருந்தினை பழையபடி, செய்யூரில் இருந்து அம்மனூர், அரியனூர், கல்பட்டு, மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு வரை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தடம் எண் 83 செங்கல்பட்டு வரை இயக்கி விட்டு, பின்னர் அங்கிருந்த தடம் எண்ணை மாற்றி வேறு ஒரு ஊருக்கு இயக்கப்படுகிறது. இது, ஒரு பகுதி மக்களை அவதிக்கு ஆளாக்கி விட்டு விட்டு, மற்றொரு பகுதி மக்களை அதிகாரிகள் சந்தோஷ்சப்படுத்தும் விதம் கேலி கூத்தாக உள்ளது. இதனை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.மேலும், மதுராந்தகம் பணிமனையில் போதிய அளவிலான ஊழியர்கள் இல்லாததால் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்க முடியவில்லை என கூறப்படுகிறது. நல்ல முறையில் இயங்கக்கூடிய பேருந்துகளை திருப்பி விடும் செயல், ஊழியர்கள் பற்றக்குறையா அல்லது அதிகாரிகள் அலட்சியமா என அவர்களுக்கே வெளிச்சம்’ சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi