Tuesday, May 21, 2024
Home » செய்தியாளரை கொலை செய்ய முயற்சிமேலும் ஒருவர் கைது; தப்பி ஓட முயன்றதால் கால் முறிந்தது

செய்தியாளரை கொலை செய்ய முயற்சிமேலும் ஒருவர் கைது; தப்பி ஓட முயன்றதால் கால் முறிந்தது

by Suresh

திருப்பூர், பிப்.4: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு (29). இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு பல்லடம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். இதில் அவருக்கு கை மற்றும் கழுத்து தோள்பட்டை ஆகிய இடங்களில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்ய 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய இதில் தொடர்புடைய பிரவீன் (27) மற்றும் சரவணன்(23),ஜெயப்பிரவின்(22),ஹரிகரன் (23),பாலபாரதி(25),மதன் (25)முகமது உமர்(25), கருப்புசாமி(20),அப்துல் சலாம்(25) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருபாகரன் (26) என்பவர் கோவை ஜேம்.எம். 7-ல் சரணடைந்தார். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணி என்ற புல்லட் மணி(26) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களை வீசி சென்ற இடத்தை காண்பிக்க போலீசார் அழைத்து சென்றபோது மணி தப்பியோட முயன்றுள்ளார். இதில் பள்ளத்தில் குதித்ததில் அவரது வலது காலில் முடிவு ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மணி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

16 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi