Wednesday, May 15, 2024
Home » சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளில் 6.53 டிஎம்சி நீர் இருப்பு

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளில் 6.53 டிஎம்சி நீர் இருப்பு

by kannappan

* 6 மாதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை

* நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை:  பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தவிர்த்து தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த தவணை காலங்களில் 7.6 டிஎம்சி நீர் மட்டும் தான் வந்தது. எனவே, மீதமுள்ள 4 டிஎம்சி நீரை பெறும் வகையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த 14ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 16ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 491 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. மேலும், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை அதிகரிக்குமாறு ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தமிழக நீர்வளத்துறை கோரிக்கை வைத்துள்ளது. தற்போது வரை 400 மி. கன அடி வரை தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2629 மில்லியன் கன அடியும், 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 595 மில்லியன் கன அடியும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2603 மில்லியன் கன அடியும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 320 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 419 மில்லியன் கன அடி என மொத்தம் 6.53 டிஎம்சி அதாவது 6536 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு 6 மாதங்களுக்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். …

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi