சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலையில் ஏறுமுகம் கொண்டு சென்றது. தங்கத்தின் நேற்றைய நிலவரம், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 29 உயர்ந்து ரூ.4267-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34,136-க்கு விற்பனையானது. தொடர்ந்து, உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்றைய நிலவரம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.34,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்து ரூ.4,277க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது….