சென்னை: சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 521ஆக உயர்ந்துள்ளது. ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். சென்னையில் 2134 தெருக்களில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக நேற்று மட்டும் 1,690 நபர்களிடமிருந்து ரூ.3,51,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 முதல் தற்போது வரை மொத்தம் ரூ.40,20,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது….