திருவண்ணாமலை: திருவண்ணாமலை, போளூர் மற்றும் வந்தவாசியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் இன்று முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, இன்று (30ம் தேதி முதல்) சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் மற்றும் மாதவரம் புறநகர பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.