Sunday, June 16, 2024
Home » செங்கல்பட்டு அருகே விநாயகர் சிலைக்கு காவல் இருந்த வாலிபர் சரமாரி வெட்டி கொலை: 2 நண்பர்கள் படுகாயம்

செங்கல்பட்டு அருகே விநாயகர் சிலைக்கு காவல் இருந்த வாலிபர் சரமாரி வெட்டி கொலை: 2 நண்பர்கள் படுகாயம்

by kannappan

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம், பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜேஷ் கண்ணா (23). இவர், மினி சரக்கு வேன் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனது வீட்டின் அருகே பிரமாண்ட விநாயகர் சிலை வைத்து ராஜேஷ்கண்ணா மற்றும் அவரது நண்பர்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு விநாயகர் சிலையை ராஜேஷ்கண்ணா, நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), மோகன்ராஜ் (25) ஆகிய 3 பேரும் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அப்பகுதியில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்திறங்கியது. சிலைக்கு அருகே இருந்த ராஜேஷ்கண்ணாவை சுற்றி வளைத்து, வீச்சரிவாள் மற்றும் கத்தியால் சரமாரி வெட்டினர். அவர்களை தடுக்க வந்த நண்பர்கள் கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் சரமாரி வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். பின்னர் மர்ம கும்பல் காரில் தப்பி சென்றது ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் மயங்கி கிடந்த ராஜேஷ்கண்ணா, கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 3 பேரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேஷ்கண்ணா பரிதாபமாக பலியானார். மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் பாரதபுரம் பகுதியில் ராஜேஷ்கண்ணா, கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் மலாளிநத்தம் பகுதியை சேர்ந்த கும்பலுக்கும் குடிபோதையில் வாய்த்தகராறு முற்றி அடிதடி மோதல் ஏற்பட்டது. ராஜேஷ்கண்ணாவை கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் வாலிபரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை 3 தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 14 மணி நேரத்தில் 7 பேர் கும்பல் கைது. கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான செங்கல்பட்டு அடுத்த வல்லம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த நாகராஜ் (40), அஜித் (25), ரமேஷ் (30), ஜீவா (20), லோகேஷ் (23), ராஜேஷ் (25), பார்த்திபன் (35) ஆகிய 7 பேரை போலீசார் இ்ன்று காலை கைது செய்தனர். அவர்களிடம்  தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்த 14 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi