Sunday, June 2, 2024
Home » செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடிவுகள் பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடிவுகள் பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by kannappan

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் தினசரி  ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இதில், முக்கியமாக விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் எலும்பு முறிவு நோயாளிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் எடுத்த பிறகுதான் மேற்கொண்டு சிகிச்சை தொடங்கப்படும். எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு மருத்துவமனை சார்பில் ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த ஸ்கேன் ரிசல்ட் வாங்குவதற்கு  நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஸ்கேன் ரிப்போர்ட் வாங்குவதற்காக பாமர மக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டை வரிசையில் நிற்காமல் முன்கூட்டியே பெறுவதற்காக பெண் பணியாளர் ஒருவர் தனக்கு  தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள் என முக்கியமான நபர்களுக்கு மட்டும் அந்த அறைக்குள் வரவழைத்து  புரோக்கர் மூலம் பணம் பெற்றுக்கொண்டு  முன்கூட்டியே வழங்குகிறார். இதனால், வரிசையில் கால்கடுக்க நிற்கும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதை தட்டிக்கேட்டால் நாங்கள் இப்படித்தான் செய்வோம். உங்களால் என்ன செய்யமுடியும் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என அந்த பெண் பணியாளர்  பேசி வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) மற்றும் நிலைய அலுவலர், உதவி நிலைய அலுவலர் உள்ளபட மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்து ரிப்போட் கொடுக்கவேண்டும். இடைதரகர்கள் தலையீடு இல்லாமல் ரிப்போர்ட் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

eleven − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi