Wednesday, May 15, 2024
Home » சூனியம் வைத்ததாக குற்றச்சாட்டு; பெண்ணை அடித்து கொன்ற 33 பேர் கைது

சூனியம் வைத்ததாக குற்றச்சாட்டு; பெண்ணை அடித்து கொன்ற 33 பேர் கைது

by kannappan

கஞ்சம்: ஒடிசாவில் சூனியம் வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டால் 50 வயது பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த பலர் அடித்துக் கொன்றனர். இவ்வழக்கில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் மதுர்சுவா கிராமத்தை சேர்ந்த யுதிஷ்டிர் நாயக் என்பவரின் குடும்பத்தினர், முன்விரோதம் காரணமாக பட்டு நாயக் என்பவருக்கு சூனியம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் யுதிஷ்டர் நாயக்கின் வீட்டிற்குள் நுழைந்து அவரது 50 வயதுடைய பெண், அவர்களது இரு மகன்கள் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த யுதிஷ்டரை அவரது மகன்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவர்களது தாய் இறந்து கிடந்தார். தகவலறிந்த கபிசூர்யா நகர் போலீசார், இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புருஷோத்தம்பூர் சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி ரஜினிகாந்த் சமல் கூறுகையில்: பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் 20 பெண்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டு நாயக் என்பவருக்கு யுதிஷ்டர் நாயக்கின் குடும்பத்தினர் சூனியம் வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்றார்….

You may also like

Leave a Comment

15 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi