விருதுநகர், ஆக. 14: விருதுநகர் ரயில்வே தண்டவாளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடைபெற்றது. நாளை ஆக.15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சுதந்திர தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு இந்தியா முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை செய்து வருகின்றனர்.
விருதுநகர்-தூத்துக்குடி ரயில்வே பாதையில் கவுசிகா மகாநதி பாலத்தில் உள்ள தண்டவாளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் சோதனை நடந்தது. இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில் எஸ்.ஐ மலையாண்டி மற்றும் ரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ சுரேஷ்குமார் உள்ளிட்டோர் தண்டவாளங்களில் வெடிகுண்டு பரிசோதனை நடத்தினர்.