சிவகாசி, மே 19: சிவகாசி அருகே டூவீலர் மோதி சுகாதார ஆய்வாளர் காயமடைந்தார். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். ராஜபாளையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது டூவீலரில் எரிச்சநத்தம் ரோடு பட்டுப்பூச்சி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் அழைப்பு வந்ததால், ரோட்டின் ஓரமாக டூவீலரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிவகாசி சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்(23) ஓட்டி வந்த டூவீலர் ரமேஷ் மீது மோதியது. இதில் ரமேஷ் காயமடைந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.