சீர்காழி: சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி நுழைவு வாயில் முன்பு சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் அதனை சரி செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே மேலையூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வந்து படித்து செல்கின்றனர். இந்த நிலையில் கல்லூரி நுழைவு வாயிலிலிருந்து கல்லூரிக்கு செல்லும் சாலை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சாலை சேறும் சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.சாலைகள் சேறும் சகதியுமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கல்லூரிக்குள் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் படுமோசமாக இருந்து வருகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்லூரிக்கு செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….