சீர்காழி, செப்.23: சீர்காழி யில் குப்பை தரம் பிரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிக்க வில்லை என்ற குற்றச்சாட்டும், குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகர் தூய்மை பணியாளர்கள் பணி புரியும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். இதேபோல் குப்பைகளை எரிக்கக் கூடாது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.