பொள்ளாச்சி :பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தையில் ஞாயிறு மற்றும் புதன்கிழமை என வாரம் இருமுறை வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களான தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு இங்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் வரை 2 ஆயிரம் வாழைத்தார்கள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மழை, சீசன் குறைவு காரணமாகவும் வாழைத்தார் வரத்து தற்போது காந்தி மார்க்கெட்டுக்கு குறைவாக உள்ளது. பூவன் வாழைத்தார் கிலோ ரூ.34க்கும், கற்பூரவள்ளி ரூ.30க்கும், செவ்வாழை ரூ.42க்கும், நேந்திரன் ரூ.50க்கும், கதலி ரூ.48க்கும், ரஸ்தாலி ரூ.34க்கும் விற்பனை ஆனதாகவும், நேற்று சுமார் ஆயிரம் வாழைத்தார் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், சீசன் குறைவு மற்றும் மழை காரணமாக வாழைத்தார் வரத்து மார்க்கெட்டுக்கு குறைவாக இருந்ததாகவும், வியாபாரிகள் தெரிவித்தனர்….