திருப்பூர், ஏப்.13: திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சி.டி.சி. கார்னர் கபஸ்தான் சாலை மறுசீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது சாலையை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழக்குடோன் பகுதியில் புதிய தண்ணீர் குழாய் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.