வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவகாமி அம்மையார் நடராஜர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடித்து தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் இங்கு கும்பாபிஷேகம் உடனடியாக நடத்திட வேண்டி தென்மண்டல அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருமுறைகள் பாட்டு பாடி வழிபாடு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்….