Wednesday, May 15, 2024
Home » சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: தங்கச்சிமடத்தில் நாளை உண்ணாவிரதம்: ஜன. 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம்

சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: தங்கச்சிமடத்தில் நாளை உண்ணாவிரதம்: ஜன. 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம்

by kannappan

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்கள், 8 விசைப்படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்ைக கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரும், ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் 12 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர்.இதனால் ராமேஸ்வரத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவர் சங்க செயலாளர் சேசுராஜ் உட்பட அனைத்து சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் நாளை கடலோர மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், டிச. 31ம் தேதிக்குள் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படாவிட்டால், ஜன. 1ம் தேதி ராமேஸ்வரம் – சென்னை ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

4 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi