திருவாடானை,ஆக.25: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(25). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானதால் புதுக்கோட்டையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமியின் வயதை சரிபார்த்த டாக்டர்கள், ராமநாதபுரம் மாவட்ட மகளிர் ஊர் நல அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஊர்நல அலுவலர் முத்துலட்சுமி, திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.