கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள பைத்தந்துறை புதூர் காலனி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கச்சிராயபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து வருகிறார். 11ம் வகுப்பு படித்த போது, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ்நிலையம் பகுதியில் பேருந்திற்கு சிறுமி காத்திருந்த நிலையில், ஒரு செல்போன் கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை எடுத்து உரியவரான கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் மகன் குமணன்(22) என்பவரிடம் சிறுமி கொடுத்துவிட்டார். அன்று முதல் சிறுமியிடம் அந்த வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இதன் பின்னர் குமணன் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதனையடுத்து இருவரும் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20.9.2022 அன்று சிறுமியை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சிறுவங்கூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு குமணன் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமிக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது தாய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தததில், சிறுமி 11 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேள்விபட்டதும் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த குமணன் என்பவரை காதலித்து தனிமையில் பேசி வந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குமணன் மீது வழக்கு பதிந்து அதிரடியாக கைது செய்தனர்….
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் அதிரடி கைது
previous post