ஜீயபுரம், மார்ச் 12: சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பேட்டவாய்த்தலை அண்ணாநகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலத்தை ரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி திறந்து வைத்தார்.
ரங்கம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பாலத்திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறுகமணி பேரூராட்சி தலைவர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். செயல் அலுவலர் நளாயினி முன்னிலை வகித்தார். ரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி புதிய பாலத்தை திறந்து வைத்தார். இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜலிங்கம், துணை தலைவர் குமார், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.