நெல்லை, மார்ச் 14: மூலைக் கரைப்பட்டி பேரூராட்சி 1வது வார்டு சின்னமூலக்கரையில் ₹33 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவி பார்வதி மோகன் தலைமை வகித்து பூங்காவை திறந்து வைத்தார். நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினர்கள் முத்துக்குமார், மீனா, சொர்ணம், பேரூராட்சி இளநிலை பொறியாளர் சவுரிராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வானுமாமலை, சக்திவேல், முத்து, வெள்ளத்துரை, மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.