சின்னமனூர், ஏப். 10: சின்னமனூர் பகுதியில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து வருவதால் சாகுபடியை விரிவுபடுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சின்னமனூரில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் வருடம் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் நடக்கிறது. மேலும் மழைநீர் உட்பட கண் மாய் குளங்களில் தேக்கப்படும் தண்ணீ ரால் நிலத்தடி நீர் உயர்வு பாசனத்தால் பெற்று வாழை, தென்னை, திராட்சை, காய்கறிகள், தக்காளி, மிளகாய், பூக்கள், செங்கரும்பு, ஆலை கரும்பு உள்ளிட்ட பல் வேறு சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுகிய கால பயிரான 70 நாட்களில் அறுவடைக்கு வரும் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக கிலோ 80 ரூபாய் 90 என உச்ச விலையில் இருந்த வெங்காயம் படிப்படியாக குறைந்து கிலோ 20, 30 என விற்பனையானது. கடந்த ஒரு மாதமாக படிப்படியாக சின்ன வெங்காயத்தின் விலை ரூ.35,40, 50 என உயர்ந்து கொண்டு வருகிறது. மேலும் தேவையும் அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்து விதைத்த பயிர்களை அறுவடை செய்தவுடன் பின்னர் மாற்றாக அடுத்த பயிராக சின்ன வெங்காயத்தினை விதைத்து சாகுபடியினை விரிவுபடுத்தி வருகின்றனர்.