சின்னசேலம், ஏப்.28: சின்னசேலம் அருகே தோட்டப்பாடி ஊராட்சி பேக்காடு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(32). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயமணி. இவருடைய வீட்டிற்கு அருகிலேயே கம்பி வேலியால் ஆட்டு கொட்டகை அமைத்து அதில் 16 ஆடுகளை வளர்த்து வந்தார். மேலும் ஜெயமணி ஆடுகளுக்கு மாலையில் தீவனம் போடுவதுடன், அதிகாலையில் தண்ணீர் வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஜெயமணி தண்ணீர் வைக்க சென்றபோது 8 ஆடுகள் இறந்த நிலையிலும் 3 ஆடுகள் துடித்துக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இரவில் மர்ம விலங்கு கடித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. தகவல் அறிந்த வன அலுவலர் சத்தியபிரியா, கால்நடை மருத்துவர் சரண்யா, விஏஓ ரஞ்சித்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வன அலுவலர் சத்தியபிரியா அந்தப் பகுதியில் உள்ள கால் தடங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன ஆடுகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும்.
சின்னசேலம் அருகே பரபரப்பு மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
previous post