தேன்கனிக்கோட்டை, டிச.27: தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில், குந்துகோட்டை பஸ் நிறுத்தம் அருகே, கடந்த 24ம்தேதி 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்றபோது, திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் தவறி விழுந்தவர் பலி
previous post