அரூர், மார்ச் 6: அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையிலான போலீசார், கடந்த மாதம் அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கள்ளச்சாராயம், மது பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது, ஓட்டல், பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் என 17 பெண்கள் உள்பட 91 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,416 மதுபாட்டில்கள், 32 லிட்டர் சாராயம், 4 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.