Sunday, June 16, 2024
Home » சாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

சாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

by Karthik Yash

தர்மபுரி, மே 12: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட மாம்பழம் மொத்த வியாபாரம் செய்யும் குடோன்களில், மாம்பழங்களை பழுக்க வைக்க ரசாயனங்கள் உபயோகப்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் உள்ளிட்ட குழுவினர் நேற்று டேக்கிஸ்பேட்டை, சந்தைப்பேட்டை, புரோக்கர் ஆபீஸ் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாம்பழ குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மருந்து தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் 10 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 2 கடைகளுக்கு ₹2 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகரில் உள்ள அனைத்து பழ குடோன்கள் மாம்பழ விற்பனை கடைகள் கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். உரிமம் இல்லாமல் பழங்கள் விற்பனை செய்யக் கூடாது என, கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

15 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi