Sunday, May 19, 2024
Home » சாம்பவர்வடகரையில் இறகுபந்து மைதானம், அடிப்படை வசதி அமைச்சர்களிடம் பேரூராட்சிதலைவர் சீதாலட்சுமி முத்து கோரிக்கை மனு

சாம்பவர்வடகரையில் இறகுபந்து மைதானம், அடிப்படை வசதி அமைச்சர்களிடம் பேரூராட்சிதலைவர் சீதாலட்சுமி முத்து கோரிக்கை மனு

by Dhanush Kumar

சுரண்டை: சாம்பவர்வடகரையில் இறகுப்பந்து மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை மனுவை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 75 ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பவர் வடகரை பேரூராட்சியில் திமுகவை பொதுமக்கள் வெற்றி பெற செய்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இறகு பந்து மைதானம் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஊர் மேலழகியான்குளம் முதல் சாம்பவர் வடகரை கருங்குளம் கால்வாய் இனைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கியுள்ளார். மேலும் சாம்பவர்வடகரை அரசு தொடக்கப்பள்ளி (கீழூர்)கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளிக்குள் வருகிறது.

You may also like

Leave a Comment

6 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi