ராயக்கோட்டை, மே 6: ராயக்கோட்டை பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் சாமந்திப்பூவை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தேய்பிறை முகூர்த்தங்கள் நடந்த நிலையிலும், விலை குறையாமல் விற்பனையாகிறது. அதோடு கோயில் விழாக்கள் நடந்து வரும் நிலையில், சாமந்திப்பூ கிலோ ₹200க்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது. வளர்பிறை முகூர்த்த நாட்களில், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இப்பகுதியில் விளையும் பூக்கள், தமிழகம் முழுவதும் உள்ள நகர்களுக்கு விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். விலை குறையாமல் விற்பதால், அறுவடை கூலியை பொருட்படுத்தாமல், அதிக கூலி ஆட்களை வைத்து பறிக்கின்றனர்.
சாமந்தி பூக்கள் அறுவடை தீவிரம்
previous post