கோபால்பட்டி, மார்ச் 28: சாணார்பட்டி அருகே 31 அடி உயர சிலையுடன் கூடிய ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சாணார்பட்டி அருகே உள்ள வடகாட்டுபட்டியில் 31 அடி உயர சிலையுடன் கூடியஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் அமைக்கப்பட்டது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டன.பின் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தங்கள் உதவியுடன் கோயில் கோபுரம் மற்றும் மகா மாரியம்மன் சிலைக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாணார்பட்டி, கோபால்பட்டி, கொசவபட்டி, வடகாட்டுப்பட்டி, தவசிமடை, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்….