தேவகோட்டை, ஜூலை 18: நேபாளம் தலைநகர் காத்மாண்டு நகரில் சர்வதேச சிலம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் சிலம்ப போட்டியில் 38 பேர் தங்கப் பதக்கங்களை வென்றனர். இதில் தேவகோட்டையில் பயின்று வந்த இரண்டு மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று திரும்பினர்.
இதில் யாழினி, நிதி ஆகியோர் சர்வதேச சிலம்பு போட்டியில் வாள்வீச்சு, மான் கொம்பு பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். தேபாளிவ் இருந்து தேவகோட்டைக்கு வந்த மாணவிகளை நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ் மற்றும் பலர் வாழ்த்தி பாராட்டி வரவேற்பு கொடுத்தனர். தேவகோட்டை டிஎஸ்பி பார்த்திபன் வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களை வாழ்த்தி பாராட்டி கவுரவித்தார்.