வேலூர், பிப்.7: வேலூர் அடுத்த பொய்கைக்கு மாடு ஏற்றி சென்ற மினிவேன் எரிந்து நாசம் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் நேற்று காலை 6 மணியளவில் மினி வேனில் மாடுகளை பொய்கை மாட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார். அப்போது பொய்கை சமத்துவபுரம் சர்வீஸ் சாலையில் செலும்போது முன் பக்கம் இன்ஜினியிலிருந்து புகை வந்துள்ளது. உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு மாடுகளை இறக்கி விட்டு தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். தீ அதிகமான காரணத்தால் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளனர். இருப்பினும் தீ மள மள என பரவியதால் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் வேனில் மாடுகளுடன் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.