ஈரோடு, ஏப். 6: சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கோபி, ஆப்பக்கூடல், வரப்பாளையம், அறச்சலூர், ஈரோடு வடக்கு, ஈரோடு டவுன், பெருந்துறை, ஈரோடு தெற்கு, அந்தியூர், சித்தோடு, ஆசனூர், சிறுவலூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு பெண் உள்பட 11 பேர் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 127 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.