Saturday, May 11, 2024
Home » சட்டவிரோத மது விற்பனை பெண் உள்பட 16 பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை பெண் உள்பட 16 பேர் கைது

by Arun Kumar

 

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலம் போலீசார் நடத்திய ரெய்டில் சத்தி ஆர்டிஓ ஆபீஸ் அருகில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரை காரியபட்டியை சேர்ந்த தினேஷ்குமார்(25). பஸ் ஸ்டாண்டு அருகில் விற்பனை செய்த திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த சபரிவாசன்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதே போல அந்தியூர், வஉசி வீதியை சேர்ந்த தர்மராஜ்(21) என்பவரை கைது செய்தனர். ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய ரெய்டில் ஈரோடு நெரிக்கல்மேடு, அதியமான் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மனைவி ருக்மணி(46), சின்னய்யா(47) ஆகியோரை கைது செய்துள்ளனர். பர்கூர் போலீசார் நடத்திய ரெய்டில் பர்கூர், ஈரெட்டியை சேர்ந்த சிவா(37), காங்கயம், மாரன்னன்பாளையத்தை சேர்ந்த செல்லமுத்து(71) ஆகிய இருவரை கைது செய்தனர். இதே போல ஈரோடு மற்றும் கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய ரெய்டில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 16 பேரை கைது செய்து 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

You may also like

Leave a Comment

seven − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi