கோவை, ஜூன் 2: கோவை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் மழை நீரை சேமித்து குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், பொது இடங்கள் என 250க்கும் மேற்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிதாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கவும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.