Sunday, May 12, 2024
Home » கோழி கேட்டு தகராறு வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது

கோழி கேட்டு தகராறு வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது

by Ranjith

 

திருமங்கலம், பிப்.28: திருமங்கலம் அருகே கோழிகடையில் கோழி கேட்டு தகராறு செய்து வாலிபரின் மண்டையை உடைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகேயுள்ள கூடக்கோவிலை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி முத்துலட்சுமி(51). இவர் கூடக்கோவில் கிராமத்தில் கோழிகடை வைத்துள்ளார். கடந்த 25ம் தேதி இரவு கடையை மூட முயன்ற முத்துலட்சுமியிடம், விருதுநகர் மாவட்டம் கீழஉப்பிலிகுண்டை சேர்ந்த கன்னிசாமி(25) தனது நண்பர் ஒருவருடன் வந்து கோழி கேட்டார். இரவு நேரமாகி விட்டதால் கோழியை தரமுடியாது என அவர் கூறவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் விலக்கி விடவே இருவரும் சென்றுள்ளனர். மறுநாள் கன்னிசாமி தனது உறவினர்கள் சிலருடன் வந்து முத்துலட்சுமியின் கடையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது முத்துலட்சுமியின் கடையில் பணிபுரிந்த உறவினர் முத்துக்குமார் இதனை தட்டிகேட்கவே ஆத்திரமடைந்த கன்னிசாமி அவரது உறவினர் லட்சுமிபுரத்தினை சேர்ந்த கார்த்திக்(24) உள்ளிட்ட சிலர் சேர்ந்து முத்துக்குமாரை தாக்கி அவரது மண்டையை உடைத்தனர். புகார் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னிசாமி மற்றும் கார்த்திக்கை நேற்று கைது செய்தனர். கோழிகடையில் தகராறில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twelve − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi