மதுரை, ஏப். 7: இலவச பஸ் பயணத்தில் பெண் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை கோரியும், இதன்பேரில் மாதர் சங்க நிர்வாகிகள் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரியும் நேற்று மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன்னுத்தாய் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, நிர்வாகி இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு கோரிக்கை மனுவை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரனிடம் அவர்கள் வழங்கினர்.