குன்னூர் : குன்னூர் காட்டேரி பூங்காவில் கோடை விழாவிற்காக மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் காட்டேரி பூங்கா உள்ளது. இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. வரும் ஏப்ரல்,மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் முதல் சீசன் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டின் முதல் சீசனுக்காக ஒன்றரை இலட்சம் மலர்நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. தற்போது எதிர்வரும் கோடை சீசனுக்குஅதைவிட அதிகமாக நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.தற்போது மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கியுள்ளனர்.இந்த மலர்களில் ஆன்ட்ரினம்,பெடுனியா,பால்சம்,பெகோனியா, பேன்சி,சால்வியா,ஆஸ்டர் போன்ற முப்பது வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ் நெதர்லாந்து,பஞ்சாப்,கொல்கத்தா,காஷ்மீர் போன்ற பகுதிகளிலிருந்துபெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விரைவில் பூங்கா முழுவதும் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. கோடை விழா கொண்டாட்டத்தின் போது இந்த மலர் செடிகள் அனைத்திலும் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….