மதுரை, மே 11: தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மதுரை கோ.புதுார் பகுதியல் உள்ள பாரதி வீதி உலா ேராட்டில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் மதுரை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பயிற்சியில் சிலம்பம், ஓவியம், பரதநாட்டியம், பாட்டு உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற வகுப்பில் சுமார் 170 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வகுப்புகள் வரும் மே 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கோடைகால கலை பயிற்சி முகாம்
previous post