Saturday, June 1, 2024
Home » கொழும்பில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே: நெருக்கடியால் வெளிநாடு தப்பி செல்ல திட்டம்?

கொழும்பில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே: நெருக்கடியால் வெளிநாடு தப்பி செல்ல திட்டம்?

by kannappan

கொழும்பு: இலங்கை பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில்,  பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆளும் கட்சி எம்பி பலியானார். பல நகரங்களிலும் வன்முறை பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த வன்முறையில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். இன்று காலை இலங்கை பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாதுகாப்பான இடத்தில் ராஜபக்சே குடும்பத்தினருடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். …

You may also like

Leave a Comment

19 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi