சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக திரையுலகினர் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். முதல்வரை நேரில் சந்தித்தும் சிலர், ஆன்லைன் மூலமாகவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணத்தை அளித்து வருகின்றனர். இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் தமிழ்குமரன், நிருதன், கெளரவ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்….