கொடைக்கானல்: கொடைக்கானலில் சீசனையொட்டி பிளம்ஸ் பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளம்ஸ் பழம் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பிளம்ஸ் பழம் அறுவடை சீசன் இருக்கும். இந்தாண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பிளம்ஸ் பழம் அறுவடை தொடங்கியது. தற்போது அறுவடை மும்முரமாக நடந்து வரும் நிலையில், விளைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு கிலோ ரூ.120 முதல் 150 வரை விற்கப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும். அப்போது நல்ல விலை கிடைக்கும். கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் கொடைக்கானலுக்கு வந்து பழங்களை வாங்கிச் செல்வர். கொடைக்கானலில் சீசன் களைகட்டும் நேரத்தில்தான் பிளம்ஸ் பழங்கள் அறுவடையும் தொடங்கும். அப்போது நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் பிளம்ஸ் மகசூல் குறைந்து வருவதால், தமிழக அரசு அதிக மகசூல் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….