கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்தாண்டு சீசனை வரவேற்கும் வகையில், நகரில் 100க்கும் மேற்பட்ட ஹோம் மேட் சாக்லேட் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள இயற்கை காட்சிகளை காணவும், குளுகுளு காலநிலையை அனுபவிக்கவும் லட்சக்கணக்கானோர் சீசனுக்கு வருகின்றனர். தற்போது சீசனுக்கு தயாராகும் கொடைக்கானலில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஹோம்மேட் சாக்லேட்கள், யூகலிப்டஸ் தைலத்தை வாங்கிச் செல்வர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் முடங்கிக் கிடந்த சாக்லேட் தயாரிப்பு தொழில் இந்தாண்டு புத்துயிர் பெற்றுள்ளது. சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் வகையில், புதுவகையான சாக்லேட்களை பலவித வண்ணங்களில் தயாரித்து வருகின்றனர். குறிப்பாக பில்லிங் வகை சாக்லேட்கள், ஹோம் கேசியூ, பாட்ஜூ மற்றும் நகரில் விளையும் பழங்கள் மூலம் தயாரிக்கும் சாக்லேட்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.நகரில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இதனிடையே தரமற்ற உணவுப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….
கொடைக்கானலில் சீசனையொட்டி 100 வகை ஹோம் மேட் சாக்லேட் அறிமுகம்: 2 ஆண்டுக்கு பிறகு சூடுபிடித்த சாக்லேட் தொழில்
previous post