திண்டுக்கல்: கொடைக்கானலில் படகுப்போட்டி 3 பிரிவுகளாக நடைபெற்றுள்ளது. கொடைக்கானலில் கடந்த 24-ம் தேதி கோடைவிழாவானது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. வழக்கமாக கோடைவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கோடைவிழாவில் சுற்றுலா துறை சார்பில் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், வருவாய்த்துறை, தோட்டக் கலைதுறை, மீன்வளத்துறை, சுற்றுலா துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் உள்ளிட்ட அரசு துறை சார்பில் படகுகள் பங்கேற்றன. அதேபோன்று, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படகுப்போட்டி இன்று நடைபெற்றது. குறிப்பாக 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடைபெறாத படகுப்போட்டி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு படகு குழாமில் நடைபெற்ற இந்தப்போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், 2 மற்றும் 4 சீட்டர், மற்றும் ரோப் படகு போட்டியானது நடைபெற்றது. இதில் 60 சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் படகு ஓட்டுனர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. …