Sunday, May 19, 2024
Home » கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் செல்போன்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோ, படங்கள் பறிமுதல்

கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் செல்போன்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோ, படங்கள் பறிமுதல்

by kannappan

* அடைக்கலம் தந்த பெங்களூரு கல்குவாரி உரிமையாளர் கைதாகிறார் * போலீசார் தீவிரம்சென்னை: நடிகை சாந்தினி அளித்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களில் இருந்து, நடிகையுடன் நிர்வாணமாக இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தலைமறைவாக இருந்தபோது மணிகண்டனுக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு கல்குவாரி உரிமையாளரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி(36). இவர் மே 28ம் தேதி அதிமுக அமைச்சரவையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்- மனைவி போல் குடும்பம் நடத்தி ஏமாற்றி விட்டார். 3 முறை கருவுற்ற என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து மணிகண்டன் என்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின்படி அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313, 323, 376, 417, 506(i) மற்றும் 67(ஏ) தொழில் நுட்ப சட்டப்பிரிவு  உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை 2 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இதற்கிடையே, நண்பர்கள் உதவியுடன் பெங்களூரு எலட்க்ரானிக் சிட்டி அடுத்த கெப்பகோடி பகுதியில் பெங்களூரு கல்குவாரி தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான ரிசாட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை, செல்போன் சிக்னல் உதவியுடன் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம், அடையார் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மணிகண்டன் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நாங்கள் இருவரும் சம்மதத்துடன் குடும்பம் நடத்தினோம். நான் சாந்தினியை கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தவில்லை என்று மட்டும் கூறியுள்ளார். கருக்கலைப்பு குறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதேநேரம் நிர்வாண படங்கள் அனுப்பி மிரட்டியதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதைதொடர்ந்து போலீசார் மணிகண்டனை நேற்று முன்தினம் மாலை சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 2 தேதி வரை சிறையில் அடைத்தனர். அதைதொடர்ந்து மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வழக்கிற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. உடனே போலீசார் 2 செல்போன்களையும் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தபோது, நடிகை சாந்தினியுடன் ஒன்றாக படுக்கை அறையில் நிர்வாண நிலையில் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. அதை தனது போனில் தனி போல்டராக வைத்து இருந்தது தெரியவந்தது. அதில் பெரும்பாலான வீடியோக்கள் குளியல் அறையில் இருவரும் ஒன்றாக குளிக்கும் காட்சிகள் மற்றும் படுக்கை அறையில் இருவரும் மது அருந்தும் காட்சிகள். இந்த சம்பவங்களில் இருவரும் நிர்வாண நிலையில் இருந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. எனினும் அதன் உண்மை தன்மை அறிய தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.  அதேநேரம், மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவி செய்த பெங்களூரு கல்குவாரி உரிமையாளரின் செல்போனை தான் மணிகண்டன் பயன்படுத்தி வந்துள்ளார். பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று தெரிந்தும் அடைக்கலம் கொடுத்ததும் இல்லாமல் அவருக்கு தனது செல்போனை கொடுத்து உதவியதால் கல்குவாரி உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் மணிகண்டனுக்கு உதவிய பெங்களூரு கல்குவாரி உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் நடிகை சாந்தினியை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்து பல வகையில் உதவிய செய்து வந்த பரணியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு முழு விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்….

You may also like

Leave a Comment

sixteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi