Tuesday, April 30, 2024
Home » கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் கொலை?

கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் கொலை?

by Karthik Yash

உளுந்தூர்பேட்டை, ஜூன் 10: உளுந்தூர்பேட்டையில் நேற்று கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை மர்ம நபர்கள் அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணாநகர் சமுத்திரக்குளம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி மகன் ஆறுமுகம் (30), இவரது மனைவி சுடர்க்கொடி (27). ஆறுமுகம் ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்தார். சமீப காலமாக அவர் வீட்டில்தான் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் வசித்து வந்த வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறை அருகே கைகள் இரண்டும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த அவரது மனைவி சுடர்க்கொடி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சுடர்க்கொடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஆறுமுகம் தூக்கில் பிணமாக தொங்கியதால் மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொன்று கைகளை பின்புறமாக கட்டி தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

20 − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi