திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டு வர கேரள மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு டிச.30 முதல் ஜன.2ம் தேதி வரை அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள விதிகளின் படி, டிச.30 முதல் இரவு நேர ஊரடங்கின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள், வணிகவளாகங்கள், பார்க்குகள் போன்றவை தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். மக்கள் கூடுவதை தடுக்க ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. …