கெங்கவல்லி, அக். 12: கெங்கவல்லியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(50). இவர் விறகு வெட்டும் கூலித்தொழிலாளி. இந்நிலையில் நேற்று மதியம், தம்மம்பட்டி மெயின் ரோடு ஈஸ்வரன் கோயில் அருகில் தனது டூவீலரை நிறுத்தி விட்டு, அருகில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியை முடித்துவிட்டு வந்துபோது, அவரது டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
கெங்கவல்லியில் டூவீலர் திருட்டு
previous post