மேட்டூர், மே 11: மேட்டூர் அண்ணா நகரில் மேட்டூர் -பவானி சாலையில், சுமார் 50 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் நேற்று கிடந்தது. காலை முதல் மாலை வரை, போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையில் சடலம் கிடந்ததால், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். மாலையில் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் இறந்து இடந்தவர் மேட்டூர் தொழிலாளர் இல்லப் பகுதியை சேர்ந்த முருகன் (52) என்பது தெரிய வந்துள்ளது. அவரை யாரேனும் கொலை செய்து சாலையில் வீசிச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலி தொழிலாளி சடலம் மீட்பு
previous post