Wednesday, May 22, 2024
Home » கூலி தொழிலாளியை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது

by kannappan

பெரம்பூர்: மாதவரம் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவர் இனியன் (39), கூலி தொழிலாளி. கடந்த 20ம்தேதி இரவு நண்பர் சசிகுமாருடன் பைக்கில் உறவினர்களை பார்க்க பெரம்பூர் தில்லைநாயகம் 2வது தெரு வழியாக சென்றுள்ளார். அங்கு 4 இளைஞர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இனியவனின் பைக்கையும் நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்கவே அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இனியனை சரமாரியாக தாக்கினர். இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்த இனியவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுபற்றி திருவிக நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெரம்பூர் தில்லைநாயகம் 2வது தெருவை சேர்ந்த பிரபு (37) நண்பர்களுடன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தில்லைநாயகம் 2வது தெருவை சேர்ந்த சரோ (எ) சரவணன் (33), மணியம்மை நகர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (34), திலீபா (30) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

twelve + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi